முதல் கையெழுத்தாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்

மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற கமல்நாத், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டுள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைநகர் போபாலில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்ற கமல்நாத் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அவர் கையெழுத்திட்டார்

Exit mobile version