மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாது அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டும் வரைவு திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் திட்டத்தால், காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என்றும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மத்திய நீர்வள ஆணையம், இந்த திட்டம் குறித்த தமிழகத்தின் நியாயமான எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல், வரைவு திட்டத்தை தயாரிக்க கர்நாடக அரசிற்கு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version