டெல்லியில் வன்முறை பாதித்த இடங்களை பார்வையிட்ட முதலமைச்சர் கெஜ்ரிவால்

நீதிமன்ற உத்தரவை அடுத்து, டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆய்வு செய்தார்.

டெல்லியில் வன்முறை நிகழ்ந்த இடங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், டெல்லி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலவரப் பகுதிகளை பார்வையிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கலவரம் நடந்த வடகிழக்கு பகுதிகளில் முதலமைச்சர் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், கலவரம் குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டறிந்தார்.

Exit mobile version