அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் தீவிர பிரசாரம்

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

2ம் கட்ட பிரசாரத்தின் 4ஆம் நாளான இன்று காலை முதல் மதியம் வரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் வைத்திலிங்கம், காஞ்சிபுரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதேபோல், மாலை 4.30 மணிமுதல் ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலை, திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

ஸ்ரீபெரும்புதூரில், மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து வாக்குசேகரித்த முதலமைச்சர் பழனிசாமி, முந்தைய தேர்தல்களில் அதிமுக அறிவித்த தேர்தல் அறிக்கைகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். கல்வித்துறை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிமுக அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

Exit mobile version