புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!!

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர், மூன்று மாவட்டங்களில் முடிவுற்ற 13 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 3 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

 

 அதைத் தொடர்ந்து, 18 ஆயிரத்து 589 பயனாளிகளுக்கு, 169 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக, 9 பேருக்கு நலத்திட்ட உதவிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், 3 மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version