அரவக்குறிச்சி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் களை கட்டியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். மாலை 5 மணிக்கு தளவாபாளையத்தில் தேர்தல் பரப்புரையை அவர் தொடங்குகிறார். வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம், க. பரமத்தி ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதைத்தொடர்ந்து, தென்னிமலை, சின்னதாராபுரம், நஞ்சைகாளகுறிச்சி ஆகிய இடங்களில் பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் ஆதரவு திரட்டுகிறார்.

Exit mobile version