முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சேலத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தி வருகிறளார். இந்தநிலையில், சேலம் விமான நிலையம் வந்த அவருக்கு, சிக்கனம்பட்டி ஊராட்சி கழகம் சார்பிலும், சேலம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பிலும், பூரண கும்ப மரியாதை செலுத்தி வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகர ஆணையாளர் சங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கலிக்கர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், கும்பத்தை ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர். பள்ளி மாணவர்களும் முதலமைச்சரை வரவேற்றனர்.

Exit mobile version