தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் நாளை உலகெங்கிலும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளை, மக்கள் இன்புற்று கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.விவசாய பெருங்குடி மக்களின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு முன்னோடி திட்டங்களை விவசாய பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகி அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று வாழ்த்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கியுள்ளார்.

Exit mobile version