கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலுக்கான மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக கடலோர மாவட்டங்களுக்கு 10 ஆயிரம் ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கஜா புயலுக்கான மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version