மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, மற்றும் நோய்த்தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலிக்காட்சி மூலம் நடத்தப்படவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது, ஊரடங்கு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Exit mobile version