கொரோனா வைரஸ் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதனை தடுக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version