"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைப்பார்"

அதிமுக கூட்டணி மக்கத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சுகுனாபுரத்தில் உள்ள பள்ளியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவை அளித்ததாகத் தெரிவித்தார். மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைப்பது உறுதி என தெரிவித்தார்.

Exit mobile version