முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி நாள் நிதி வழங்கினார்

முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் கொடி நாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கொடி நாள் நிதி வழங்கினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் கொடி நாள் நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியிடம் வழங்கினார். அப்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம், முன்னாள் படை வீரர் நலச்சங்க இயக்குநர் வெங்கடேஷ் ஐஏஎஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கொடிநாள் செய்தியில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும் கொடி நாள் நிதியை தாராளமாக வழங்கவேண்டும் தமிழ்நாடு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version