ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார். வரும் 14ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதுகுறித்தும் ஆளுநரிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version