ரூ.5 கோடி மதிப்பீட்டில் எடப்பாடியில் புதிய நகராட்சி கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி கட்டிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரவேற்பு கூடம், பொதுப்பிரிவு, சுகாதார பிரிவு, ஆணையாளர் அறை, நகரமன்றத் தலைவர் அறை, நகரமன்ற கூட்ட அறை உள்ளிட்ட அறைகளுடன் லிப்ட் வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Exit mobile version