3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

தென் மாவட்டங்களில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார். 

காலை 9மணிக்கு திருநெல்வேலி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் P.H. மனோஜ்பாண்டியனை ஆதரித்து வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். காலை 10 மணிக்கு நாங்குனேரியிலும் 11 மணிக்கு திருநெல்வேலி வாகையடிமுக்கு பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார். இதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேலப்பாளையத்திலும் 4.15 மணிக்கு அம்பாசமுத்திரத்திலும் 4.45 க்கு ஆலங்குளத்திலும் மனோஜ்பாண்டியனை ஆதரித்து பேசுகிறார். தென்காசி மக்களவை தொகுதி புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக மாலை 5.30 மணிக்கு கடையநல்லூரிலும், மாலை 6 மணிக்கு புளியங்குடியிலும் 6.30க்கு சங்கரன்கோவிலிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர், விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து இரவு 7.15 மணிக்கு சேவல்பட்டியிலும் 7.45 மணிக்கு தாயில்பட்டிலும் 8.30க்கு படந்தால் பகுதியிலும் இரவு 9 மணிக்கு சாத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் இரவு 9.15 மணிக்கு அனுப்பங்குளத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

Exit mobile version