முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்

மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்ட பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் வல்லம்படுகையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், விவசாயிகள் நலனில் அக்கறைகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். காவிரி கோதாவரி இணைப்புத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

Exit mobile version