செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாகி உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டை தனி மாவட்டமாக பிரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து, 37வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணி துவக்க விழா, செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், தமிழகத்தின் 37வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

Exit mobile version