சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட, சென்னையில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று அதிகம் உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், சிறப்பு அதிகாரி, மாநகராட்சி அதிகாரிகள், களப்பணி குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Exit mobile version