அத்திவரதரை தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திவரதரை தரிசனம் செய்தார். வரதராஜபெருமாள் கோயிலில், 23ம் நாளில், அத்திவரதர் பச்சை பட்டாடை உடுத்தி, மகிழம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில், அத்திவரதரை தரிசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் சென்றார். அங்கு முதலமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்,  பின்னர் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

Exit mobile version