முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்றைய (18.03.2021) பிரசாரம் பற்றிய விவரங்கள்!

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(18.03.2021), காலை திருத்துறைப்பூண்டியில், அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர் வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்தும்,

நாகையில், அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை ஆதரித்தும் முதலமைச்சர் பிரசாரம் செய்கிறார்.

இன்று (18.03.2021) மாலை பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜை ஆதரித்து செம்பனார்கோவில் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமி ஆதரித்தும்,

சீர்காழியில் அதிமுக வேட்பாளர் பி.வி.பாரதியை ஆதரித்தும் முதலமைச்சர் தீவிர பிரசாரம் செய்கிறார்.

இதையடுத்து, காட்டுமன்னார்கோவிலில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனை ஆதரித்தும்,

இறுதியாக, சிதம்பரத்தில் கே.ஏ.பாண்டியனை ஆதரித்தும் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

Exit mobile version