பாசனத்திற்காக பாரூர் பெரிய ஏரியை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

போச்சம்பள்ளியில் உள்ள பாரூர் பெரிய ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 2ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 2 ஆயிரத்து 397 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் திறக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version