ஜூலை 29-ம் தேதி ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 29-ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், வரும் 29ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பதா, வேண்டாமா என்பது குறித்து கருத்து கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

Exit mobile version