வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சிறப்பு உபகரணங்கள் வாங்க 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பெய்து, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாருதல், வெள்ளத்தடுப்பு, கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான தகவல்கள் அறிக்கையாகவும், Power Point வெளியீடாகவும் தயாரித்து சமர்பிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செலவம், அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரிடர் மீட்பு படையினை வலுப்படுத்தவும், உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்கவும் 38 கோடியே 52 லட்சர் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version