திருப்பத்தூரில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூறாவளி பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். காலை 8.30 மணிக்கு ஆம்பூர் புறவழிச்சாலையில், மகளிர் சுயவுதவிக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து, 9.45 மணிக்கு வாணியம்பாடியில் இஸ்லாமிய கல்லூரி அருகே, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர், 11.20 மணிக்கு தூய இருதயக் கல்லூரியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார்.

 

 

Exit mobile version