ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 5வது கட்டமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கணபதிநகர், கைனூர் பகுதிகளில், காலை 10.30 மணிக்கு மகளிருடன் ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர், அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் சோளிங்கர் தொகுதி பாண்டியநல்லூர், சோளிங்கர் பகுதிகளில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை தொகுதி முத்துக்கடையில் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட கந்தனேரியில், மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட சென்றாம்பள்ளியில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாக வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 

 

Exit mobile version