மஹாராஷ்ட்ராவில் உயிரிழந்த அதிரடிப்படை வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி

மஹாராஷ்ட்ராவில் நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த 16 அதிரடிப்படை வீரர்கள் உடலுக்கு மாநில முதலமைச்சர் பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.

கட்சிரோலி பகுதியில், அதிரடிப்படையினர் வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், 16 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வீரமரணமடைந்த அதிரடிப்படை வீரர்கள் உடல்களுக்கு, நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Exit mobile version