பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் ஆய்வு

அதிமுக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட கூட்ட ஏற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் ஆய்வு செய்தனர்.

அதிமுக கூட்டணி கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை அருகே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்நிலையில் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதனிடையே பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version