முதலமைச்சர்,துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!!!

மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதலமைச்சரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரை சந்தித்துவிட்டு திரும்பிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகக் கூறினார். இதனிடையே, துணை முதலமைச்சர், இன்று மாலையே வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version