திருவாரூர் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று மாலைக்குள் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிப்பார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதியில் இருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 11 ம்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. இதனிடையே திருவாரூரில் கஜா புயல் காரணமாக பொதுமக்கள் தங்களது ஆவணங்களை இழந்துள்ளதால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும் இது போன்ற புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை அளிக்க தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்திய பிரதாசாஹு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கை இன்று மாலைக்குள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version