மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் வெளியிடவும், பொதுத்தேர்தலை ஏப்ரல்- மே மாதத்திற்குள் நடத்தி முடித்திடவும் தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 17-வது மக்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் வரைவு வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி முடிவடைந்த நிலையில் கடந்த 1ம் தேதி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து பள்ளி பொதுத்தேர்வுகள், பண்டிகைகள், விழாக்கள் போன்றவற்றால் இடையூறின்றி பல கட்டங்களாக தேர்தலை நடத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்தல் தேதியை வரும் மார்ச் 2-வது வாரத்தில் வெளியிடவும், தேர்தலை ஏப்ரல்- மே மாதத்திற்குள் நடத்தி முடித்திடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

Exit mobile version