" நடையை மூடி சாவியை ஒப்படைக்கபோவதாக தலைமை அர்ச்சகர் அறிவிப்பு"

நடையை மூடி சாவி ஒப்படைக்கபோவதாக சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இன்றைய நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு, கோவில் நடையை மூடி சாவியை ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

தான் பக்தர்களின் பக்கம் இருப்பதாக கூறிய அவர், வேறு வழியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version