ப.சிதம்பரம் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, சி.பி.ஐ. கைது செய்தது. இதனையடுத்து சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், சிதம்பரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீது உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Exit mobile version