திகார் சிறையில் உள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர் திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை பார்க்க அவரது மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் திகார் சிறைக்கு சென்றனர். சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version