பேரறிவாளனுக்கு சிறையில் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக புழல் சிறை நிர்வாகம் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

நெஞ்சுவலியின் காரணமாக இதய சிகிச்சை பிரிவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சிறுநீரக தொற்று தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version