அரூரில் குறுவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

அரூரில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு குறுவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூரில் லயோலா கல்வி நிறுவனமான புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டு போட்டியை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.சம்பத்குமார் தொடங்கி வைத்தார். போட்டியில் 52 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 110 மாணவிகளும், 160 மாணவர்களும் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசு சார்பில் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.

Exit mobile version