மாற்றத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி

தஞ்சாவூரில் மாற்றத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான செஸ் போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூரில் உள்ள செஸ் அகாடமி சார்பில் 7வது ஆண்டாக மாற்றத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை,சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பொதுப்பிரிவு போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில் மாநிலம் முழுவதும் 62 பேர் கலந்து கொண்டனர்.

Exit mobile version