கண்ணாரேந்தல் கருப்பண்ணசாமி கோயில் பூக்குழி விழா

ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள கண்ணாரேந்தல் கருப்பண்ணசாமி கோயில் பூக்குழி விழா விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் உள்ள கண்ணாரேந்தல் பகுதியில் ஆணை மேல் அய்யனார் கோயிலில் பூக்குழி விழா ஆண்டுதோறும் காப்பு கட்டப்பட்டு, எட்டாம் நாளில் விழா நடைபெறுவது வழக்கம். முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழாவில் கோயில் பூசாரிகள் வெட்டரிவாளுடன் திருப்பழத்தை சுமந்த படி சென்று, பின்னர் பக்தர்கள் பின் தொடர்ந்து முள்ளிமுனை தீர்த்தவாரி கடற்கரையில் பக்தர்கள் தீர்த்தமாடி கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பூசாரி பூ இறக்கியவுடன் பக்தர்கள் பால் காவடி, இளநீர் காவடி, பறவை காவடி எடுத்து பூக்குழி பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Exit mobile version