சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 4 ஆயிரத்து 549 பேரும், தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்து 334 பேரும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 801 பேரும், அண்ணாநகரில் 3 ஆயிரத்து 636 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 160 பேரும், அடையாறில் 2 ஆயிரத்து 69 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 497 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 324 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 243 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version