செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்படும்

செங்கல்பட்டில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில், ஆட்சியர் ஜான் லூயிஸ், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, இதுவரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 81 பேர் தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை இரட்டிப்பாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக விளக்கம் அளித்தார்.

Exit mobile version