மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

சென்னை தியாகராய நகரில், குடியிருப்பு பகுதியில் இரண்டாவது நாளாக மழை நீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் தொடர்ந்து கனமழை நீடித்து வரும் சூழலில், கடந்த 15 நாட்களாக வடதமிழகம் அருகே கரையைக் கடந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால், சென்னையில் இரண்டு நாட்கள் அதிக அளவு மழை பெய்தது.

இதையடுத்து, சில நாட்களாக மழை இல்லாத சூழலில், நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதில், திருமலை சாலை, பசுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் இணைப்பு சாலைகள் மழைநீரால் சூழப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் ஓடும் நிலையில் மக்கள் பயணித்து வருகின்றனர். இதனால் மழை நீரை விரைந்து அகற்றி, வடிகால்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version