சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகையால் போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாப் அணியுடனான போட்டியில் விளையாடுவதற்காக சென்னை வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களை நூற்றுக் கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தோடு வரவேற்றனர். இதனால் சிறிது நேரம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version