காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளின் காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றிவரும் சாம் வின்சென்ட் என்பவர் வசித்துவரும் கவலர் குடியிருப்பில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, ரெட்டேரியில் அவருக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல், புழுதிவாக்கத்தில் அமைந்துள்ள, சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சரவணன் என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனை நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version