சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை நீட்டிக்க முடிவு

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரத்தை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே இரண்டாவது வழிதடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த நேரத்தை அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை விரைவில் நீட்டிப்பு செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக, இந்த நேர நீட்டிப்பை சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, விமான நிலையம், பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version