சென்னையில் மெட்ரோ ரயில் நாளை முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கிணங்க நாளை முதல் வார நாட்களில், காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், மற்ற நாட்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணிவரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பயணிகளிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version