கொளத்தூரில் காதலன் இறந்ததால் கோவிலம்பாக்கத்தில் தானும் இறந்த காதலி

காதலன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவத்தை அறிந்த காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது.

சென்னை பள்ளிகரணையை அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியை சேர்ந்த
பாலாஜி, கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியை சேர்ந்த திவ்யா,இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி பாலாஜி குடும்ப பிரச்னை காரணமாக, மனமுடைந்து உடலில் மண்ணெண்ணைய் ஊற்றிக்கொண்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது காதலன் உயிரிழந்த தகவலை அறிந்த திவ்யாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரு குடும்பத்தினரிடையும், நண்பர்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version