சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா?

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான தஹில் ரமானி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தஹுல் ரமானி 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த இடமாற்றத்தை ரத்து செய்ய தஹில் ரமானி கொலிஜியத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் தஹில் ரமானியின் கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. இந்நிலையில் தஹில் ரமானி நீதிபதி பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version