அமெரிக்க கீழவையின் இடைக்கால தலைவரான சென்னை பெண்

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றார்.

சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால், சிங்கப்பூரிலும், இந்தோனேசியாவிலும் வளர்ந்து பின்னர் 1982-ல் அமெரிக்காவுக்கு குடியேறினார். அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் ஜனநாயக கட்சி சார்பில் எம்.பி. ஆனார். இந்த நிலையில், இவர் தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழவையின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய பெண் இவர் ஆவார்.

இடைக்கால தலைவராக இருக்கையில் அமர்ந்து பணியாற்றிய படங்களை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் “அமெரிக்க பாராளுமன்ற இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த பதவியை ஏற்கும் முதல் தெற்கு ஆசிய பெண்ணாக பெருமைப்படுகிறேன், பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என கூறி உள்ளார்.

Exit mobile version