சென்னையின் எஃப்.சி 4 – 3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்டிடம் தோல்வி

சென்னையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி அணி 4 க்கு 3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வியை தழுவியது.

5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் அணிகள் மோதின. மிகவும் எதிர்பர்க்கப்பட்ட இப்போட்டியின் முதல் பாதியில் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின் பார்கெஸ் முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து சென்னை அணி இரண்டு கோல்களை அடித்தது. இதனையடுத்து நார்த் ஈஸ்ட் அணி 29, 37, மற்றும் 39-வது நிமிடங்களில் கோல் அடித்தது. இதனால் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பாக ஆடிய நார்த் ஈஸ்ட் அணி ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. கடைசி வரை போராடிய சென்னையின் எஃப்சி அணி கோல் ஏதும் அடிக்காத நிலையில் தோல்வியை தழுவியது.

இதனால் நார்த் ஈஸ்ட் அணி 4 க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து சீசனின் சென்னை அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version