காய்கறி, பழக்கடை உள்ளிட்ட சிறிய கடைகள் திறந்திருக்கும்- சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

காய்கறி, பழக்கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் அனைத்தும் திறந்திருக்குமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், சிறிய காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்துள்ள ஆணையர் பிரகாஷ், வதந்திகளை பரப்பி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version